Posts

Showing posts from 2017

"அரியது கேட்கின்" நாவல் அத்தியாயம் 4"

Image
"அரியது கேட்கின்"  4.  புட்டா   படமரத்தில் பாதி நெய்த புடவையைச் சுற்றி வைத்திருந்த துணியை எடுத்து உதறினார். ஒரு வார தூசியும் ஜரிகைப் பிசிறுகளும் சாரளத்தின் வழியாக தறிக்கூடத்திற்குள் விழுந்த காலைச் சூரிய ஒளியில் பொன்னிற துணுக்குகளாய் மின்னி மறைந்தது. "பூட்டியே வைத்திருந்தாலும் புழங்காத அறைக்குள் இத்தனைதூசி எப்படித்தான் வருகிறதோ?" என்று அலுத்துக் கொண்டு தறிக்கூடத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் சக்திவேல். தறிக்கூடத்தின் பின் பகுதியில் பழமையான இரு குழித்தறிகள் எதிரெதிரே அமைந்திருந்தன. புதிதாய் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேடைத்தறி, தறிக்கூடத்தின் முன்பகுதியை முக்கால் பங்கு வியாபித்திருந்தது. எதிர் பலகைக்கு எதிரே இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கெங்கையம்மனின் படத்தில் சந்தனமாலை சாத்தப்பட்டிருந்தது. சந்தன மாலையின் மூன்று ஆரங்களும் முடியுமிடத்தில் சிகப்பு நிற பட்டுக் குஞ்சம் ஒட்டடை படிந்து சடைபிடித்த குடுமியைப்போல் சிறுத்திருந்தது. மேடைதறியின் சட்டங்கள் பளபளத்துக் கிடந்தன. உட்க்காரும் இடம் மட்டும் சற்றே மெலிந்து சிறு பள்ளமாய் தேய்ந்திருந்தது. குழித்...